Saturday 24 October 2015

அறிவிப்பு பதாகைகள் ‍ (Posters)


தோக்கியோ நகரின் புற நகர் பகுதியான கசிவா (Kasiwa) நகரில் தோக்கியோ பல்கலைக் கழகத்தின் மற்றொரு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் இயக்குநரான பேராசிரியர் தகாகி கசிதா (Prof.Takaaki Kaj) இந்த வருடத்திற்கான இயற்பியல் பிரிவின் நோபல் பரிசினை வாங்கி உள்ளார். 

இவரது பெருமையினை பொது மக்களும் அறியும் பொருட்டு கசிவா இரயில் நிலையத்தின் மேற்கு வாயிலின் அருகில் அறிவிப்பு பதாகை  ஒன்றினை வைத்துள்ளார்கள்.

இன்றைய தினம் இந்த இடத்தினை கடக்கும் பொழுது பள்ளி மாணவர்கள் நின்று இந்த செய்தியினை படித்து விட்டு போனதை கண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.  நிச்சயம் நோபல் பரிசு என்றால் என்னவென்று அவரது ஆசிரியர்களிடம் மேலதிக தகவலை கேட்பார்கள். அடுத்த தலைமுறையாவது புதிய உயரங்களை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பாகவே நான் இதனை பார்க்கிறேன்.

நம் தமிழகத்தில் திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு கட் அவுட்டும், பால் அபிசேகம் செய்யும் இளைஞர்கள் தயவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஆசிரிய பெருமக்களது சாதனைகளுக்கு சிறிய அளவில் யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் அறிவிப்பு பதாகைகளை வைக்கலாம். 

கசிவா (Kasiwa) நகர இரயில் நிலையம், மேற்கு நுழைவாயில், ஜப்பான்

இயற்பியல் பரிசிற்கான நோபல் பரிசு வென்றவர்கள் பற்றிய எனது பழைய கட்டுரையினை படிக்க இந்த சுட்டியில் காணலாம்

No comments:

Post a Comment